உடுமலையில் வனத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம்: வன ஊழியர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் உடுமலை வனசரக அலுவலகத்தில் வனத்துறை ஊழியர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. பல்வேறு சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் உடுமலை வனசரக அலுவலகத்தில் வனத்துறை ஊழியர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாம் கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் ஆலோசனைப்படியும், துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா முன்னிலையிலும் நடத்தப்பட்டது.

இந்த மருத்துவ முகாமில், வனப் பணியாளர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் கண், பல் தொடர்பான பல்வேறு சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பொது மருத்துவர், கண் மருத்துவர், பல் மருத்துவர் உட்பட 5க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் இந்த முகாமில் பங்கேற்றனர்.



உடுமலை வனச்சரகர் மணிகண்டன், மருத்துவர்கள் மற்றும் உடுமலை, திருப்பூர் வனக்கோட்டத்தில் உள்ள வன ஊழியர்கள், வனக்காப்பாளர்கள் பலரும் இந்த இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர். இந்த முயற்சி வனத்துறை ஊழியர்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களுக்கு தேவையான மருத்துவ சேவைகளை வழங்குவதற்கும் உதவியது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...