மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு முறையாக செயல்படுத்த வேண்டும் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில், மத்திய அரசின் திட்டங்கள், தமிழக அரசின் செயல்பாடுகள், வெள்ளலூர் குப்பை கிடங்கு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கமளித்தார்.


Coimbatore: கோவையில் புத்தக வெளியீட்டு விழாவிற்காக வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் கிஷன் குமார் ரெட்டியுடன் தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அண்ணாமலை பேசுகையில், "சேலஞ்ச் மாடலின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களும் போட்டியிட்டதில், ஏழு PM மித்ரா பார்க்குகளில் ஒன்று தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. விருதுநகரில் PM மித்ரா பார்க் அமைந்த பிறகு மாநில அரசு என்ன செய்திருக்கிறது? மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு கொண்டுவருவதில்லை," என்றார்.



அவர் மேலும், "மத்திய அரசின் Production linked incentive (PLI) ஆல் மட்டுமே தமிழகத்திற்கு செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் வருகின்றனர். மதுரை AIIMS மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம், தற்போது பிரச்சனைகள் எல்லாம் முடிந்து, அனுமதி பெற்று வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. 2026 ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் நிறைவடையும்," என்று கூறினார்.

பட்ஜெட் குறித்து பேசிய அண்ணாமலை, "மத்திய பட்ஜெட்டை பொருத்தவரை, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களின் பெயர்களையே குறிப்பிடவில்லை. மாநிலங்களுக்கு என்ன தேவையோ அது அறிவிக்கப்பட்டுள்ளது," என்றார்.

வெள்ளலூர் குப்பை கிடங்கு விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, "தேசிய பசுமை தீர்ப்பாயம், வெள்ளலூரில் உள்ள குப்பை கிடங்கை அகற்றக்கோரி மத்திய அரசுக்கு இரண்டு முறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் இரண்டு முறை உத்தரவிட்டும் தமிழக அரசு அந்த உத்தரவை மதிக்கவில்லை," என்று குற்றம் சாட்டினார்.

மின் கட்டணம் குறித்து பேசிய அவர், "தமிழகத்தில் மின் உற்பத்திக்கான செலவை அதிகரித்து வைத்திருக்கிறார்கள். மின் கட்டண விலையை உயர்த்தும்பொழுது அதற்கான பழியை மத்திய அரசின் மீது போட்டு விடுகிறார்கள். மாநில அரசு மின் உற்பத்திக்கான செலவை குறைக்க வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...