கோவை வழியாக கேரளா-பெங்களூருக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

எர்ணாகுளம்-பெங்களூரு இடையே ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 26 வரை சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை. கோவை, சேலம் வழியாக செல்லும் இந்த ரயில் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும்.


கோவை: எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இந்த சிறப்பு ரயில் சேவையை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ஜூலை 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. எர்ணாகுளம்-பெங்களூரு இடையே புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் இந்த ரயில் இயக்கப்படும். எர்ணாகுளத்தில் பகல் 12.50 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் போத்தனூர் ரயில் நிலையத்தில் மாலை 4.13-4.15 வரை நின்று செல்லும். சேலத்திற்கு மாலை 6.33க்கு சென்றடையும். பெங்களூரு கண்டோன்மென்டுக்கு இரவு 10 மணிக்கு சென்றடையும்.

திரும்பும் பயணத்தில், பெங்களூரு - எர்ணாகுளம் இடையே செவ்வாய், சனி மற்றும் திங்கட்கிழமைகளில் மட்டும் இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. பெங்களூரில் காலை 5.30க்கு புறப்படும் இந்த ரயில் சேலத்திற்கு காலை 8.58க்கும், ஈரோட்டிற்கு காலை 9.50க்கும், திருப்பூருக்கு 10.33க்கும், போத்தனூருக்கு 11.15க்கும் வந்து எர்ணாகுளத்திற்கு மதியம் 2.20க்கு சென்றடையும்.

Newsletter

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...