கோவை வழியாக கேரளா-பெங்களூருக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

எர்ணாகுளம்-பெங்களூரு இடையே ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 26 வரை சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை. கோவை, சேலம் வழியாக செல்லும் இந்த ரயில் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும்.


கோவை: எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இந்த சிறப்பு ரயில் சேவையை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ஜூலை 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. எர்ணாகுளம்-பெங்களூரு இடையே புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் இந்த ரயில் இயக்கப்படும். எர்ணாகுளத்தில் பகல் 12.50 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் போத்தனூர் ரயில் நிலையத்தில் மாலை 4.13-4.15 வரை நின்று செல்லும். சேலத்திற்கு மாலை 6.33க்கு சென்றடையும். பெங்களூரு கண்டோன்மென்டுக்கு இரவு 10 மணிக்கு சென்றடையும்.

திரும்பும் பயணத்தில், பெங்களூரு - எர்ணாகுளம் இடையே செவ்வாய், சனி மற்றும் திங்கட்கிழமைகளில் மட்டும் இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. பெங்களூரில் காலை 5.30க்கு புறப்படும் இந்த ரயில் சேலத்திற்கு காலை 8.58க்கும், ஈரோட்டிற்கு காலை 9.50க்கும், திருப்பூருக்கு 10.33க்கும், போத்தனூருக்கு 11.15க்கும் வந்து எர்ணாகுளத்திற்கு மதியம் 2.20க்கு சென்றடையும்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...