மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஒத்துழைப்பு அவசியம் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையம் திறப்பு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்தினார்.


கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் அமெரிக்கா இந்திய பவுண்டேஷன் சார்பில் ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையம் திறப்பு விழா நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு மையத்தை திறந்து வைத்தனர்.



நிகழ்ச்சியில் மாணவர்களிடையே உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ், "சமுதாயத்தில் என்ன கற்றுக் கொண்டோமோ அதை திருப்பி சமுதாயத்திற்கு கொடுக்க வேண்டும் என்பது நமது கடமை. நாம் படித்தோம், நாம் சம்பாதித்தோம், நன்றாக இருக்கிறோம் என்று என்னாமல், இந்த சமுதாயத்திற்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை நினைக்கும் மாணவர்களாக உருவாக வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

மேலும் அவர், "பாடம் நடத்திக் கொண்டே இருந்தால் சலிப்பு ஏற்படும். இதனால் கற்றல் திறனை, செயல் திறனை அதிகரிக்க வேண்டும். அதற்கு மாணவர்களின் முழு ஒத்துழைப்பு தேவை. கற்றல் திறன் அதிகரித்தால் தேர்வு எழுதும் போது உதவியாக இருக்கும். பள்ளிக்கூடம் என்பது உங்கள் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளும் இடமாக இருக்க வேண்டும்," என்று கூறினார்.



இந்த விழாவில் கிணத்துக்கடவு பேருராட்சி தலைவர் கதிர்வேல், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ராஜன், கிணத்துக்கடவு நகர திமுக செயலாளர் கனகராஜ், பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...