கோவை சரவணம்பட்டியில் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு: கடைகள் கட்டி வாடகை வசூல் செய்த அதிர்ச்சி தகவல்

கோவை சரவணம்பட்டியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கடைகள் கட்டி வாடகை வசூலித்த சம்பவம் அம்பலமானது. மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் சில நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டி வாடகை வசூல் செய்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட மனுவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இடங்களில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.



மேலும், அரசு நியாயவிலை கடைக்கு வாடகைக்கு விடப்பட்டு, அரசிடம் இருந்தே வாடகை வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த அதிர்ச்சி தகவலை அடுத்து, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆக்கிரமிப்பு குறித்து விரிவான விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அந்த இடத்தில் வேறு ஏதேனும் ஆக்கிரமிப்புகள் இருப்பின், அவற்றையும் உடனடியாக அகற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...