கோவையில் CCCA ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்: நிர்வாகிகளுக்கு அழைப்பு

கோவையில் CCCA ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் 2024-25ஆம் ஆண்டிற்கான பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 1ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு ஹோட்டல் ரத்னா ரெசிடென்சியில் நடைபெற உள்ளது. நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியின் ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. CCCA ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் 2024 – 25ஆம் ஆண்டிற்கான பொதுக்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் ஹோட்டல் ரத்னா ரெசிடென்சியில் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டம் KCP Infra Limited நிறுவனத் தலைவரும், CCCA ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் செயலாளருமான K. சந்திரபிரகாஷ் தலைமையில் நடைபெறும். மேலும், CCCA ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் தலைவர் R. உதயகுமார், பொருளாளர் A. அம்மாசையப்பன், துணைத் தலைவர் V. ராஜகோபால், துணைச் செயலாளர் T. மைக்கேல், துணைப் பொருளாளர் R. செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிப்பார்கள்.

இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கோவை PROPEL GROUP நிறுவனத்தின் JMD வெங்கடேஷ் அவர்கள் பங்கேற்க உள்ளார். அலுவலக பணியாளர்கள், நிர்வாக உறுப்பினர்கள், கமிட்டி உறுப்பினர்கள் உட்பட பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

CCCA சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு இந்தக் கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்குமாறு CCCA ஒப்பந்ததாரர் நலச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. மாலை 5.30 மணிக்கு தொடங்கும் கூட்டம் இரவு உணவுடன் நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...