கோவையில் CCCA ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்: நிர்வாகிகளுக்கு அழைப்பு

கோவையில் CCCA ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் 2024-25ஆம் ஆண்டிற்கான பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 1ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு ஹோட்டல் ரத்னா ரெசிடென்சியில் நடைபெற உள்ளது. நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியின் ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. CCCA ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் 2024 – 25ஆம் ஆண்டிற்கான பொதுக்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் ஹோட்டல் ரத்னா ரெசிடென்சியில் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டம் KCP Infra Limited நிறுவனத் தலைவரும், CCCA ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் செயலாளருமான K. சந்திரபிரகாஷ் தலைமையில் நடைபெறும். மேலும், CCCA ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் தலைவர் R. உதயகுமார், பொருளாளர் A. அம்மாசையப்பன், துணைத் தலைவர் V. ராஜகோபால், துணைச் செயலாளர் T. மைக்கேல், துணைப் பொருளாளர் R. செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிப்பார்கள்.

இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கோவை PROPEL GROUP நிறுவனத்தின் JMD வெங்கடேஷ் அவர்கள் பங்கேற்க உள்ளார். அலுவலக பணியாளர்கள், நிர்வாக உறுப்பினர்கள், கமிட்டி உறுப்பினர்கள் உட்பட பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

CCCA சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு இந்தக் கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்குமாறு CCCA ஒப்பந்ததாரர் நலச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. மாலை 5.30 மணிக்கு தொடங்கும் கூட்டம் இரவு உணவுடன் நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...