இளைஞர்கள் போதைக்கு அடிமையாவது வேதனை அளிக்கிறது - குரு வணக்க நாள் விழாவில் குமரகுருபர சுவாமிகள்

கோவை சின்னவேடம்பட்டி கெளமார மடாலயத்தில் குரு வணக்க நாள் விழா நடைபெற்றது. குமரகுருபர சுவாமிகள் இளைஞர்களின் போதை பழக்கம் குறித்து கவலை தெரிவித்தார். அடுத்த ஆண்டு கொங்கு நாட்டின் அனைத்து மடாதிபதிகளையும் ஒருங்கிணைத்து விழா கொண்டாட வேண்டும் என்றார்.


Coimbatore: கோவை சின்னவேடம்பட்டி கெளமார மடாலயத்தில் குரு வணக்க நாள் விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு கலைவாணி கல்வி நிறுவனங்களின் இணை தாளாளரும், முன்னாள் கல்லூரி கல்வி இயக்குநருமான டாக்டர் குமாரசாமி தலைமை வகித்தார். பேரூர் ஆதீனம் தவத்திரு. மருதாசல அடிகளார், செஞ்சேரி மலை நந்தவன திருமடம் முத்து சிவராமசாமி அடிகளார், நிலக்கிழார் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வணிக வரித்துறை முன்னாள் முதன்மை ஆணையர் ராமலிங்கம் கலந்து கொண்டார்.

விழாவில் குமரகுருபர சுவாமிகள் அருளாசி வழங்கி சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில், கெளமார மடாலயத்தின் வரலாற்றை விளக்கினார். 1890-ம் ஆண்டு சின்னவேடம்பட்டியில் ராமானந்த சுவாமிகளால் இம்மடாலயம் தோற்றுவிக்கப்பட்டதாகவும், அவரது முக்கிய கொள்கைகளாக கொல்லாமையும், புலால் உணவு மறுத்தலும் இருந்ததாகவும் கூறினார்.

குமரகுருபர சுவாமிகள் தொடர்ந்து பேசுகையில், "தற்போது நமது சமயத்திற்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருவதை நமது கண்முன் பார்த்து வருகிறோம். நமது இளைய சமுதாயம் எங்கே சென்று கொண்டு இருக்கிறது என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும். நமது மொழியையும் இழந்து வருகிறோம். இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருவதை பார்த்து வருகிறோம். இது வேதனை அளிக்கிறது," என்று கவலை தெரிவித்தார்.

மேலும், "குரு என்பவர் மடாதிபதிகள் மட்டுமல்ல ஆசிரியரும் குருதான். அடுத்த ஆண்டு கொங்கு நாட்டில் உள்ள அனைத்து மடாதிபதிகளையும் ஒருங்கிணைத்து குரு வணக்க நாளை கொண்டாட வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...