கோவை மாநகராட்சி 23வது வார்டில் புதிய பூங்கா திறப்பு: ஆணையாளர் திறந்து வைத்தார்

கோவை மாநகராட்சி 23வது வார்டில் ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா மற்றும் பல்லுயிர் பூங்காவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் திறந்து வைத்தார். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இப்பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள 23வது வார்டு பி.எம்.ஆர். லே-அவுட் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா மற்றும் பல்லுயிர் பூங்காவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் இன்று (24.07.2024) திறந்து வைத்தார்.

விஜயலட்சுமி, ராமகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் முழு பங்களிப்புடன் ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இப்பூங்காவில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.



இப்பூங்காவில் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், சோலார் மின்விளக்குகள், குடிநீர் வசதி, ஓய்வு அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சொட்டுநீர் பாசன வசதி மற்றும் நடைபாதை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இப்பூங்காவில் இடம்பெற்றுள்ளன.



பூங்காவை திறந்து வைத்து பேசிய மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன், "இப்பூங்காவினை சிறந்த முறையில் அமைத்துத் தந்த தன்னார்வலருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பகுதி பொதுமக்கள் இப்பூங்காவினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு பயனடைய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.



இந்நிகழ்வில் கிழக்கு மண்டல குழுத்தலைவர் திருமதி இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாமன்ற உறுப்பினர் திருசித்ரா மணியன், உதவி ஆணையர் திரு முத்துச்சாமி, விஜயலட்சுமி-ராமகிருஷ்ணன் டிரஸ்ட் நிறுவனர் திரு ராமகிருஷ்ணன், நிர்வாக இயக்குனர் திருமதி உஷா ராணி, ஒருங்கிணைப்பாளர் திரு பாலகிருஷ்ணன், செயற்பொறியாளர் திரு கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திரு ராஜேஷ், உதவி பொறியாளர் திரு குமார், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...