சூலூரில் சர்க்கார் புறம்போக்கு நிலத்தில் வேலி அமைக்க கோரிக்கை: ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் மனு

சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சர்க்கார் புறம்போக்கு நிலத்தில் வேலி அமைக்க கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் மனு அளித்துள்ளது. 9 மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்படாததால் போராட்டம் நடத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் வட்டத்தில் உள்ள சர்க்கார் புறம்போக்கு நிலத்தில் வேலி அமைக்க கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் அமைந்துள்ள சூலூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் அருகே உள்ள சூலூர் கிராம புலா எண். 704/5 (பழைய புல எண். 422/15) நெகாலை 400 சதுர மீட்டர் (10 சென்ட்) சர்க்கார் புறம்போக்கு நத்தம் இடத்தில் வேலி அமைக்க மாவட்ட நிர்வாகமும், வருவாய் கோட்டாட்சியர் தெற்கு அவர்களும் கடந்த 18.10.2023 அன்று உத்தரவிட்டனர்.



ஆனால், 9 மாதங்கள் கடந்தும் இந்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக சூலூர் பேரூராட்சி செயல் அலுவலரை நேரில் சந்தித்து, சர்ச்சைக்குரிய இடத்தில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யாமலும், வாகனங்களை நிறுத்தாமலும், கடைகளை அமைக்காமலும் இருக்க உடனடியாக வேலி அமைக்க வேண்டும் என்று ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

மேலும், வேலி அமைக்கும் போது பாதுகாப்பு வழங்கி ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கோரி காவல் கண்காணிப்பாளரிடமும் மனு அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன முறையில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் லோட்டஸ் மணிகண்டன் அளித்துள்ளார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...