உடுமலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

உடுமலையில் முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் மின் கட்டண உயர்வு மற்றும் நியாயவிலை கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு குறித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையம் முன்பு திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்தும், நியாய விலை கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கப்படாததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார். தாலிக்கு தங்கம், இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல நல்ல திட்டங்கள் தமிழகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் சாஸ்திரி சீனிவாசன், நகரச் செயலாளர் ஹக்கீம், ஒன்றிய செயலாளர்கள் அன்பர் ராஜன், பிரனேஷ், முருகேசன், சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை மற்றும் பல்லடம் பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...