கோவை சிங்காநல்லூர் அருகே சுடுகாட்டில் சேவல் சண்டை சூதாட்டம்: 6 பேர் கைது

கோவை சிங்காநல்லூர் கள்ளிமடை பகுதியில் உள்ள சுடுகாட்டில் சேவல் சண்டை நடத்தி சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இரண்டு சேவல்கள் மற்றும் ரூ.7,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


Coimbatore: கோவை சிங்காநல்லூர் கள்ளிமடை பகுதியில் உள்ள சுடுகாட்டுப் பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் தலைமையிலான போலீஸ் குழுவினர் ஜூலை 21 மாலை அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடிக் கொண்டிருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சிங்காநல்லூர் ராஜலட்சுமி மில் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (45), தங்கவேல் (42), சிட்கோ நாகராஜபுரம் சுரேஷ் (49), கள்ளிமடை கருப்புசாமி (38), விக்னேஸ்வரன் (32) மற்றும் மனோஜ் குமார் (20) ஆகியோர் ஆவர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 சேவல்களும், சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ரூ.7,000 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...