கோவையில் மூதாட்டி தன்னை கருணை கொலை செய்ய அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

கோவையில் 70 வயது மூதாட்டி வசந்தா, நகை மோசடி வழக்கில் போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் கருணை கொலை அல்லது தற்கொலைக்கு அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 70 வயதான மூதாட்டி வசந்தா என்பவர் தன்னை கருணை கொலை அல்லது தற்கொலை செய்ய அனுமதிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கோயம்புத்தூர் கே.ஜி. போஸ் நகரைச் சேர்ந்த வசந்தா, தனது மனுவில் கூறியிருப்பதாவது: "விமலா கீர்த்தி உள்ளிட்ட நான்கு பேர் சேர்ந்து என்னிடமிருந்து 14 பவுன் நகை வாங்கி மோசடி செய்தனர். இது குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், முறையான விசாரணை நடத்தாமல் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க முயற்சி நடக்கிறது."

"குற்றவாளிகளுக்கு சாதகமாக குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக உள்ள காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை," என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், "மாநகர காவல் ஆணையர் சிங்காநல்லூர் காவல் நிலைய அதிகாரிகளை நேரில் அழைத்து எச்சரிக்கை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனி எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. எனவே, என்னை கருணை கொலை அல்லது தற்கொலை செய்ய அனுமதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்," என்று தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்த சம்பவம் கோவை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர்கள் இது போன்ற சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும் என்றும், முதியோர்களுக்கு உரிய பாதுகாப்பும் நீதியும் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...