கோவை மருதமலை அருகே குடியிருப்பு பகுதியில் முகாமிட்ட 10 காட்டு யானைகள்

கோவை மருதமலை அருகே 10 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன. வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இச்சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Coimbatore: கோவை மருதமலை மற்றும் கெம்பனூர் பகுதியில் ஜூலை 21 அன்று சுமார் 10 காட்டு யானைகள் முகாமிட்டன. இந்த யானைக் கூட்டம் மருதமலை அடிவாரத்தில் உள்ள ஐஓபி காலனி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

குடியிருப்பு பகுதியில் யானைகள் நுழைந்ததை அறிந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர், யானைக் கூட்டத்தை மருதமலை வனப் பகுதிக்குள் விரட்டினர்.

இருப்பினும், யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் திரும்பி வந்தன. இந்த காட்சியை அப்பகுதி மக்கள் தங்கள் கைபேசிகளில் வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் தடாகம், மருதமலை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இது அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்படையச் செய்துள்ளது. வனத்துறை அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...