சூலூர் அருகே தலையில் காயங்களுடன் இளைஞர் சடலம் மீட்பு: மது போதையில் கொலையா என விசாரணை

கோவை சூலூர் அருகே காட்டுப்பகுதியில் தலையில் காயங்களுடன் 28 வயது இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது. மது போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.


Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஓடக்கல்பாளையத்தில் காட்டுப்பகுதியில் தலையில் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுல்தான்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில், இறந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த மாரப்பன் என்பவரின் மகன் பரமசிவம் (28) என்பது தெரியவந்தது. பரமசிவம் கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தவர் என்றும், சில மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றிக்கொண்டிருந்தார் என்றும் தெரியவந்துள்ளது.



மேலும், இரவு நேரங்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள காட்டுப் பகுதியில் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, பரமசிவத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், நண்பர்களுடன் மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக பரமசிவம் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...