தென்சேரிமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு நபார்டின் 'சிறந்த FPO' விருது

சென்னையில் நடைபெற்ற நபார்டின் 43வது ஆண்டு விழாவில், ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கும் தென்சேரிமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு 'சிறந்த FPO' விருது வழங்கப்பட்டது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் விருதை வழங்கினார்.


ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலின் கீழ் வெற்றிகரமாக இயங்கி வரும் தென்சேரிமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு (FPO) நபார்டு வங்கியின் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான 'சிறந்த FPO' விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று (ஜூலை 18) நடைபெற்ற நபார்டின் 43வது ஆண்டு விழாவில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இந்த விருதை வழங்கினார்.



தமிழ்நாட்டில் நபார்டு வங்கியின் ஆதரவுடன் சிறப்பாக செயல்படும் FPO-க்களில் ஒன்றாக தென்சேரிமலை FPO தேர்வு செய்யப்பட்டுள்ளது. விழாவில் தென்சேரிமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனரும் விவசாயியுமான திரு. ரங்கராஜ் மற்றும் ஈஷா அவுட்ரீச் சார்பில் சுவாமி நலதா ஆகியோர் அமைச்சரிடமிருந்து விருதைப் பெற்றுக் கொண்டனர்.

மண் காப்போம் இயக்கத்தின் ஒரு பகுதியாக ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கும் 25 FPO-க்களில் ஒன்றாக தென்சேரிமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்படுகிறது. கோவை சுல்தான்பேட்டை பகுதியில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில், முதல் ஆண்டிலேயே 750-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக இணைந்தனர்.

இந்த FPO தனது உறுப்பினர் விவசாயிகளுக்கு தென்னை சாகுபடி மற்றும் சந்தைப்படுத்துதலில் வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. தென்னையை முதன்மைப் பயிராகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தின் முதலாம் ஆண்டு மொத்த விற்பனை ரூ.1.58 கோடியாகும். மேலும், ஈஷா அவுட்ரீச்சின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் FPO-க்கள் மூலம் மொத்தம் 9,377 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

விழாவில் நபார்டு வங்கியின் தலைமை மேலாளர், மண்டல மேலாளர், ரிசர்வ் வங்கியின் மண்டல மேலாளர் மற்றும் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...