நெகமம் பகுதியில் தொடர் மழையால் தேங்காய் உடைக்கும் பணி பாதிப்பு: லட்சக்கணக்கான தேங்காய்கள் தேக்கம்

நெகமம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான தேங்காய்கள் தேக்கமடைந்துள்ளதால் பணியாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்.



கோவை: நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர் களங்கள் உள்ளன. இந்த பகுதியில் தேங்காய் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் தொழில் முக்கிய வருமான ஆதாரமாக உள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக நெகமம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது லட்சக்கணக்கான தேங்காய்கள் உடைக்கப்படாமல் தேக்கமடைந்துள்ளன.

தொடர் மழையின் காரணமாக தேங்காய் களங்களில் பணிகள் ஜூலை 19 அன்று முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். மழை நீடித்தால் தேங்காய்கள் அழுகி வீணாகும் அபாயமும் உள்ளது.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...