கோவையில் அடிப்படை வசதிகள் கோரி அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கோவை மாநகராட்சியின் 84வது வார்டில் அடிப்படை வசதிகள் ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை பொதுமக்கள் சூழ்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலை, மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை வசதிகள் கோரி போராட்டம் நடத்தினர்.


Coimbatore: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 84வது வார்டில், அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வு செய்வதற்காக வந்த அரசு அதிகாரிகளை, குடியிருப்பு வாசிகள் சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகராட்சியின் 84வது வார்டில் உள்ள ஜிஎம் நகர், கோட்டை புத்தூர் ஜமீன்தார் நகர், வைரம் நகர், வீரபாண்டி நகர், கல்லுக்குழி, சன் கார்டன், என்எஸ் கார்டன், ரோஜா கார்டன், காந்திநகர், ஜன்னத்துல் பிர்தௌஸ் கார்டன், கேஎஸ் பார்க் போன்ற பகுதிகளில் சாலை வசதி, மழை நீர் வடிகால், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தர வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் மறியல் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.



இந்நிலையில் அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் இந்த பகுதிகளை ஆய்வு செய்வதற்காக இன்று நேரில் வந்தனர். அப்போது அதிகாரிகளை சூழ்ந்து கொண்ட குடியிருப்பு வாசிகள், அவர்களை கையோடு அழைத்துச் சென்று சேதமடைந்த சாலைகள் மற்றும் கால்வாய்களை சுட்டிக்காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



பின்னர் 88வது வார்டு எஸ்டிபிஐ கவுன்சிலர் வீட்டின் முன்பாக பொதுமக்கள் கூடவே, அங்கு கவுன்சிலரின் ஆதரவாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினர் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அடிப்படை வசதிகள் அமைத்து தர ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...