கோவை அரசு மருத்துவமனையில் காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை பெற்ற குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை பெற்ற 278 குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. குழந்தைகளின் செவித்திறன், பேச்சுத்திறன் ஆராயப்பட்டு, பெற்றோருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் பிறவியிலேயே காது கேளாத குழந்தைகளுக்கு காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை பத்து வருடங்களுக்கு மேலாக செய்யப்பட்டு வருகிறது.



இதுவரை 278 குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை இங்கு செய்யப்பட்டுள்ளது.



இதன் தொடர்ச்சியாக இன்று ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. அவர்களுடைய செவித்திறன் மற்றும் பேச்சுத் திறன் மேன்பட்டு இருக்கிறதா என்று ஆராயப்பட்டு அவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கப்பட்டது.



மேலும் அந்த கருவியை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்றும் பெற்றோர்களுக்கு செய் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.



இந்த பயிற்சி முகாமை மருத்துவமனை முதல்வர் பேராசிரியர் டாக்டர் A. நிர்மலா அவர்கள் தொடங்கி வைத்து அக்குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்கினார். மேலும் இந்த முகாமில் காது மூக்கு தொண்டை துறை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் செவித்திறன் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...