கோவையில் வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிட்ட கேரளாவைச் சேர்ந்த 11 பேர் கைது

கோவை புதூர் குளத்துப்பாளையம் பகுதியில் வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிட்ட கேரளா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 11 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்ட இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Coimbatore: கோவை புதூர் குளத்துப்பாளையம் பகுதியில் வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 11 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கோவை அருகே உள்ள கோவை புதூர் குளத்துப்பாளையம் பகுதியில் குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் ஜூலை 17 அன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த ஒரு குழுவினரை அவர்கள் கவனித்தனர்.

சந்தேகத்தின் பேரில் அந்தக் குழுவினரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கோவை புதூரில் உள்ள வீடுகளில் கொள்ளை நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 11 பேரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களின் விவரம்:

1. முகமத் யாதின் (வயது 40) - கேரளா, காசர்கோடு

2. சுனில் (வயது 45) - கேரளா, காசர்கோடு

3. அப்துல் கரீம் (வயது 47) - கேரளா, கண்ணூர்

4. சலீம் மாலிக் (வயது 25) - திருப்பூர் மங்கலம்

5. ஷாஜகான் (வயது 26) - திருப்பூர் மங்கலம்

6. சாமல் (வயது 46) - கேரளா, கண்ணூர்

7. நவ்பீல் காசிம் ஷேக் (வயது 29) - கர்நாடகா

8. முகமது யாசீர் (வயது 18) - திருப்பூர் காங்கேயம்

மேலும் மூன்று பேரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்தக் குழுவில் இருந்த சரவணன் என்பவர் தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.

கைது செய்யப்பட்ட 11 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...