காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி விழா கோலாகலமாக நடைபெற்றது

கோவை காரமடை அரங்கநாதர் கோவிலில் ஜூலை 17ஆம் தேதி ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம், வலம் வருதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.


Coimbatore: கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதர் கோவிலில் ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசி விழா ஜூலை 17ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அரங்கநாதர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

விழாவின் ஒரு பகுதியாக கால சந்தி பூஜை, விஸ்வக் சேனர் ஆராதனை, புண்யாவதனம், கலச ஆவாஹனம் போன்ற வைபவங்கள் நடைபெற்றன. ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. தொடர்ந்து தேன், நெய், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகிய வாசனை திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

பின்னர், அரங்கநாதபெருமாள் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி, மேள தாளங்கள் முழங்க கோவில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன் பிறகு, ஆஸ்தானம் எழுந்தருளிய அரங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உச்சி கால பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வேத பாராயணம், சாற்று முறை மற்றும் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராஸ்தார்கள், கோவில் செயல் அலுவலர், அறங்காவலர் குழுவினர், பணியாளர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆடி மாத ஏகாதசி விழா காரமடை அரங்கநாதர் கோவிலில் பக்தி பரவசத்துடன் நிறைவடைந்தது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...