கோவை: நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - ஆபத்தை உணராமல் மீன் பிடிக்கும் இளைஞர்கள்

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆபத்தை உணராமல் இளைஞர்கள் சிலர் ஆற்றில் இறங்கி மீன் பிடித்து வருகின்றனர்.


கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அடிவார பகுதிகளில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து, நொய்யலாற்றிலும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



குறிப்பாக நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி மற்றும் கோவை ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை மற்றும் அதன் அணைகட்டு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்பரித்து விநாடிக்கு 400 கன அடி நீர் வெளியேறி வருகிறது.



இந்நிலையில் சில இளைஞர்கள், வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், ஆபத்தை உணராமல், ஆற்றில் இறங்கி 'செல்பி' எடுப்பது, குளிப்பது, மீன்பிடிப்பதுமாக இருப்பதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதுபோன்ற அபாயகரமான செயல்களைத் தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும், அசம்பாவிதங்களைத் தவிர்க்க இதுபோன்ற இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...