கோவையில் பழமையான மரம் சாய்ந்து விழுந்ததில் இரு வீடுகள் சேதம்; பார்வையற்ற தம்பதி உயிர் தப்பினர்

கோவை உருமாண்டம்பாளையத்தில் 90 ஆண்டுகள் பழமையான வெள்ளவேளா மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. இதில் பார்வையற்ற தம்பதி மற்றும் வயதான தம்பதி வசிக்கும் இரு வீடுகள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.


Coimbatore: கோவை மாநகராட்சி 14வது வார்டுக்குட்பட்ட உருமாண்டம்பாளையம் உழைப்பாளர் வீதியில் வசிக்கும் பார்வையற்ற தம்பதியினர் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

75 வயதான ஸ்ரீனிவாச பாபு மற்றும் அவரது மனைவி 60 வயதான சரோஜினி ஆகிய இருவருக்கும் கண் தெரியாது. இன்று காலை முதல் பெய்த மழையின் காரணமாக, சுமார் 10 மணியளவில் அவர்களது வீட்டின் அருகே இருந்த 90 வருட பழமையான வெள்ளவேளா மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது.



மரத்தின் ஒரு கிளை ஸ்ரீனிவாச பாபு வீட்டின் சமையல் அறை மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் அவர்கள் வீட்டின் ஹாலில் இருந்ததால் உயிர் தப்பினர். அதே மரத்தின் மற்றொரு கிளை அருகில் வசிக்கும் 70 வயதான மாணிக்கம் மற்றும் அவரது மனைவி 62 வயதான வசந்தாமணி ஆகியோரின் வீட்டின் மீதும் விழுந்தது. அவர்களும் வீட்டின் வெளியில் இருந்ததால் உயிர் தப்பினர்.

இந்த சம்பவத்தில் இரு வீடுகளின் கூரைகள் உடைந்தும், சுவர்கள் பாதிப்படைந்தும் உள்ளன. சம்பவ இடத்திற்கு 14வது வார்டு கவுன்சிலர் சித்ரா தங்கவேல், கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் மற்றும் மாநகராட்சி உதவி பொறியாளர் உத்தமன் ஆகியோர் விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் உரிய உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...