கோவை: கல்வி நிறுவனங்களில் POCSO சட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லை - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குற்றச்சாட்டு

கோவையில் மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குற்றம்சாட்டி, புகார் கமிட்டி அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், POCSO சட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லை என்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் சுதா, மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அவர்களிடம் மனு அளித்துள்ளார். மனுவில், "கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றது. பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பிரச்சனைகள் குறித்து கூறினாலும், பெற்றோர்கள் தங்களது குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் பள்ளிகள் தங்களது நற்பெயர் கெட்டுவிடும் என்றும் இது போன்ற பிரச்சனைகளை மறைத்து விடுகிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஓராண்டிற்கு முன் ஆலாந்துறை அரசு பள்ளியில் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம், சின்மயா பள்ளி மாணவியின் பாலியல் வழக்கு, மற்றும் சமீபத்தில் வடவள்ளி ஓணப்பாளையம் பகுதியில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூலில் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி, இவை ஆசிரியர்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் POCSO சட்டம் சார்ந்த விழிப்புணர்வின்மையை காட்டுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவிகளின் எதிர்கால நலன் கருதி, கோவையில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் உடனடியாக உள் புகார் கமிட்டி (ICC கமிட்டி) அரசின் வழிகாட்டுதல்படி அமைக்கப்பட வேண்டும் என்றும், இவ்வனைத்து புகார் கமிட்டிகளையும் மாவட்ட அளவில் ஒருங்கிணைத்து மாவட்ட அளவிலான புகார் கமிட்டி ஒன்றையும் அமைக்க வேண்டும் என்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...