கோவை: கல்வி நிறுவனங்களில் POCSO சட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லை - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குற்றச்சாட்டு

கோவையில் மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குற்றம்சாட்டி, புகார் கமிட்டி அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், POCSO சட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லை என்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் சுதா, மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அவர்களிடம் மனு அளித்துள்ளார். மனுவில், "கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றது. பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பிரச்சனைகள் குறித்து கூறினாலும், பெற்றோர்கள் தங்களது குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் பள்ளிகள் தங்களது நற்பெயர் கெட்டுவிடும் என்றும் இது போன்ற பிரச்சனைகளை மறைத்து விடுகிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஓராண்டிற்கு முன் ஆலாந்துறை அரசு பள்ளியில் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம், சின்மயா பள்ளி மாணவியின் பாலியல் வழக்கு, மற்றும் சமீபத்தில் வடவள்ளி ஓணப்பாளையம் பகுதியில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூலில் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி, இவை ஆசிரியர்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் POCSO சட்டம் சார்ந்த விழிப்புணர்வின்மையை காட்டுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவிகளின் எதிர்கால நலன் கருதி, கோவையில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் உடனடியாக உள் புகார் கமிட்டி (ICC கமிட்டி) அரசின் வழிகாட்டுதல்படி அமைக்கப்பட வேண்டும் என்றும், இவ்வனைத்து புகார் கமிட்டிகளையும் மாவட்ட அளவில் ஒருங்கிணைத்து மாவட்ட அளவிலான புகார் கமிட்டி ஒன்றையும் அமைக்க வேண்டும் என்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...