கோவையில் சிஐடியு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

கோவையில் சிஐடியு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா சங்கங்கள் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர் நலவாரிய குறைபாடுகளை சரி செய்யக்கோரி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்பட்டது.


Coimbatore: கோவையில் சிஐடியு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா சங்கங்கள் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய குறைபாடுகளை சரி செய்யக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு சிஐடியு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா சங்கங்களை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.



ஆர்ப்பாட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளில் 60 வயது நிரம்பிய ஓய்வுதியர்களுக்கு மாதம் ரூபாய் 3000 பென்ஷன் வழங்குதல், தேர்தல் வாக்குறுதிபடி ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்குதல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ (ESI) மருத்துவ வசதி உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.

மேலும், நலவாரிய ஆன்லைன் சர்வரில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், நிலுவையில் உள்ள பணப் பயன்களை காலதாமதம் இல்லாமல் வழங்குதல், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான கண்காணிப்பு குழுவை மாதம்தோறும் கூட்டி நடைமுறையில் உள்ள குறைபாடுகளை சரி செய்தல் போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.



அனைத்து நல வாரியங்களுக்கும் குழுக்களை (Board) அமைத்து, குழுக்களை முறையாக கூட்டி செயல்படுத்துதல், கட்டுமான வாரியத்தில் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது போல அனைத்து நல வாரியங்களுக்கும் ஒரே மாதிரியான பணப் பயன்களை உயர்த்தி வழங்குதல், திருமணம் உள்ளிட்ட கேட்பு மனுக்களில் தேவையான ஆவணங்களை மட்டும் பதிவேற்றம் செய்ய நடைமுறைப்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடைபெற்று முடிவடைந்தது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...