கோனேரிப்பட்டியில் புதிய நியாயவிலைக் கடை கட்டிடம்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்

திருப்பூர் மாவட்டம் கோனேரிப்பட்டியில் ரூ.8.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடை கட்டிடத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார். பள்ளி மாணவர்களுடன் உரையாடிய அமைச்சர், அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னிவாடி ஊராட்சியில் கோனேரிப்பட்டி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பொது விநியோக நியாயவிலைக் கடை கட்டிடம் இன்று திறக்கப்பட்டது.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-2022-ன் கீழ் சுமார் ரூ.8.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த புதிய நியாயவிலைக் கடை கட்டிடத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்.



அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர், அங்குள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து, கோனேரிப்பட்டியில் உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சென்ற அமைச்சர், அங்கு படிக்கும் மாணவர்களிடம் அவர்களின் படிப்பு குறித்து கேட்டறிந்தார். பின்னர், மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன், வட்டாட்சியர் கோவிந்தசாமி, வட்ட வழங்கல் அலுவலர் செந்தில் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...