உடுமலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: அமைச்சர் சாமிநாதன் தொடக்கி வைத்தார்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிச்சிக்கோட்டை ஊராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் ஆர்விஜி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அமைச்சர் மு.பே. சாமிநாதன் தொடங்கி வைத்தார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிச்சிக்கோட்டை ஊராட்சி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் ஆர்விஜி தொடக்கப்பள்ளியில் தமிழக முதலமைச்சரின் கிராமப்புறங்களில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை தமிழக செய்தித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பே. சாமிநாதன் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியின் போது, அமைச்சர் சாமிநாதன் பள்ளி மாணவர்களுக்கு பொங்கல் சந்தகை இனிப்பு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த முக்கிய திட்டம் கிராமப்புற மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் கல்வி மேம்பாட்டிற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த நிகழ்வில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், வட்டாட்சியர் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாநிலம் முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் கிராமப்புற மாணவர்களின் பள்ளி வருகை மற்றும் கல்வித் தரம் மேம்படும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...