தாராபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாரத்தில் உள்ள தளவாய்பட்டினம் சிஎஸ்ஐ அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். அமைச்சர் மாணவர்களுடன் அமர்ந்து உணவு உண்டார்.


திருப்பூர்: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாரத்தில் உள்ள தளவாய்பட்டினம் சிஎஸ்ஐ அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.



திட்டத்தை தொடங்கி வைப்பதற்கு முன், கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளியில் வைக்கப்பட்டுள்ள அவரது திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மரியாதை செலுத்தினார்.



பின்னர், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை வழங்கினார்.



அவர் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை அருந்தினார்.



மேலும், தனக்கு அருகில் இருந்த மாணவ மாணவிகளுக்கு காலை உணவை ஊட்டிவிட்டு, அவர்களுடன் அமர்ந்து உணவு உண்டார்.

Newsletter

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...