தாராபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாரத்தில் உள்ள தளவாய்பட்டினம் சிஎஸ்ஐ அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். அமைச்சர் மாணவர்களுடன் அமர்ந்து உணவு உண்டார்.


திருப்பூர்: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாரத்தில் உள்ள தளவாய்பட்டினம் சிஎஸ்ஐ அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.



திட்டத்தை தொடங்கி வைப்பதற்கு முன், கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளியில் வைக்கப்பட்டுள்ள அவரது திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மரியாதை செலுத்தினார்.



பின்னர், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை வழங்கினார்.



அவர் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை அருந்தினார்.



மேலும், தனக்கு அருகில் இருந்த மாணவ மாணவிகளுக்கு காலை உணவை ஊட்டிவிட்டு, அவர்களுடன் அமர்ந்து உணவு உண்டார்.

Newsletter

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...