கோவையில் வளர் இளம் பருவத்தினரின் நலன் குறித்த தென்மண்டல கருத்தரங்கம்

கோவையில் குழந்தைகள் நல மருத்துவ சங்கம் மற்றும் அடலசன்ட் ஹெல்த் அகாடமி சார்பில் வளர் இளம் பருவத்தினரின் உடல் மற்றும் மனநலப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தென்மண்டல அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.


கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் குழந்தைகள் நல மருத்துவ சங்கம் மற்றும் அடலசன்ட் ஹெல்த் அகாடமி சார்பில் வளர் இளம் பருவத்தினருக்கு ஏற்படும் உடல் மற்றும் மனநல பிரச்சனைகளுக்கு தீர்வு காண தென்மண்டல அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.



இந்த கருத்தரங்கில் குழந்தைகள் நல மருத்துவ சங்கம் மற்றும் அடலசன்ட் ஹெல்த் அகாடமியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். சங்கத்தின் நிர்வாகிகளான டாக்டர் இஸ்மாயில், டாக்டர் லட்சுமி சாந்தி மற்றும் டாக்டர் ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.



வளர் இளம் பருவத்தினருக்கு, குறிப்பாக 10 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்படும் உடல் நலம் மற்றும் மனநல பிரச்சினைகள் குறித்தும் அதற்குரிய தீர்வுகள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் விளக்கப் படங்களுடன் பயிற்சியாளர்கள் விளக்கம் அளித்தனர்.



குறிப்பாக செல்போன் பயன்படுத்துதல், போதைப் பொருட்களை பயன்படுத்துதல், உணவு பழக்க வழக்கங்கள் ஆகியவற்றால் ஏற்படும் உடல்ரீதியான மற்றும் மன ரீதியான பாதிப்புகளை எப்படி மருத்துவர்கள் அணுக வேண்டும் என்பது குறித்தும் இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...