தாராபுரம் பொன்னிவாடி அங்காளம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பொன்னிவாடி அங்காளம்மன் கோயிலில் ஜீரணோத்தாரண பணிகளுக்குப் பின் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பொன்னிவாடி அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் ஜீரணோத்தாரண பணிகளுக்குப் பின் மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. புதிய ராஜகோபுரம் மற்றும் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு பெருவிழா இதன் ஒரு பகுதியாக நடைபெற்றது.

விழாவின் முதல் நாளில், மகாகணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் பூரணாகுதி தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இரண்டாம் நாளில், யாகசாலை பூஜை, கோ பூஜை, மஹா பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றன. பின்னர், கும்பம் மற்றும் கடம் புறப்பாடு ஆலயத்தை வலம் வந்து, ஆலய ஸ்தூபி, கோபுரம், ஆலய மூலஸ்தான தெய்வங்கள் மற்றும் புதிய கோபுரங்களுக்கு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.



அங்காளம்மன் தேவர்கள், மனிதர்கள் மற்றும் இவ்வுலகில் வாழும் அனைத்து சீவராசிகளையும் காக்கும் தெய்வமாக கருதப்படுகிறார். பொன்னிவாடியில் எழுந்தருளியுள்ள அங்காளம்மன், கூடையில் செங்கல் வடிவில் கொண்டுவரப்பட்டு, பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அங்காளம்மன் திருவுருவம் செய்யப்பட்டதாக வரலாறு கூறப்படுகிறது.

இந்த மஹா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அங்காளம்மனின் அருளைப் பெற்றனர். இந்த விழா சகல செல்வங்களையும் அளிக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...