தீத்திப்பாளையம் அருகே நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்காமல் திரும்பிச் சென்ற அதிகாரிகள்..!

தீத்திப்பாளையம் அருகே பீட்டுபள்ளம் பகுதியில் 2.5 ஏக்கர் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற பேரூர் வருவாய்த்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் நடவடிக்கை எடுக்காமல் திரும்பிச் சென்றனர்.


Coimbatore: கோவை மாவட்டம் தீத்திப்பாளையம் அருகே உள்ள பீட்டுபள்ளம் பகுதியில் 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நீர்வழிப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இப்பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்கள் வண்டி பாதையை ஆக்கிரமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 200 ஆண்டுகள் பழமையான சங்கிலி கருப்பராயன் கோயிலுக்கு செல்லும் நீர்வழிப்பாதையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் முன்னதாக மனு அளித்திருந்தது. இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் சமீபத்தில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.



இந்நிலையில், ஜூலை 12 ஆம் தேதி பேரூர் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற பீட்டுபள்ளம் பகுதிக்கு சென்றனர். ஆனால், அங்கு ஆக்கிரமிப்பாளர்கள் தாங்கள் முன்னதாகவே நிலத்தை அளந்ததாக கூறி, மீண்டும் நிலத்தை அளக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அதிகாரிகளுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில், பேரூர் வருவாய்த்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் திரும்பிச் சென்றுவிட்டனர். இச்சம்பவம் உள்ளூர் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...