கோவையில் அண்ணாமலைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை உக்கடம் பகுதியில் காங்கிரஸ் கட்சி மனித உரிமை துறையினர் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இமயம் ரஹ்மத்துல்லா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


கோவை: தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை கண்டித்து கோவை உக்கடம் பகுதியில் காங்கிரஸ் கட்சி மனித உரிமை துறையினர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவதூறாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் பெரும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் அண்ணாமலையை கண்டித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில், காங்கிரஸ் கட்சி மனித உரிமை துறையினர் சார்பாக கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.



தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சி மனித உரிமை துறையின் மாநில செயலாளர் இமயம் ரஹ்மத்துல்லா தலைமை தாங்கினார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் சங்கர், சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்.

சிக்கந்தர், கோட்டை இஸ்மாயில், மீன் அபு, கனி, அப்துல் ரஹ்மான், விஷ்ணு, பைசல், காஜா, ஆயில் ரியாஸ், அனீபா, நாசர், ஆரிஸ், மைதீன், உசேன் மற்றும் மாவட்ட பகுதி வார்டு மகளிர் அணி, ஆட்டோ தொழிற் சங்கம் உறுப்பினர்கள் என பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...