திருப்பூரில் பள்ளி மாணவியின் தாய் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாப உயிரிழப்பு

திருப்பூர் அம்மன் நகரில் பள்ளி மாணவியை அழைத்து வர சென்ற தாய் சிவகாமி, எதிர்பாராத விபத்தில் லாரி பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Coimbatore: திருப்பூர் அருகே உள்ள வாவிபாளையம், திருமுருகன் நகரைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி சிவகாமி, தனது மகளை பள்ளியிலிருந்து அழைத்து வரும்போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை வழக்கம்போல் தனது மகளை பள்ளியிலிருந்து அழைத்து வர சென்ற சிவகாமி, திருப்பூர் அம்மன் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, அங்குள்ள ஒரு கடையின் முன் நின்றிருந்த மற்றொரு இருசக்கர வாகனம் திடீரென இயக்கப்பட்டதில் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.



அப்போது அவ்வழியே வந்த லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய சிவகாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவ தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த திருமுருகன்பூண்டி போலீசார், சிவகாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விபத்துக்கு காரணமான இருசக்கர வாகன ஓட்டுநர் முத்துராஜா மற்றும் லாரி ஓட்டுநர் பவளமணி ஆகியோரை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...