கோவை அவிநாசி சாலை மேம்பால பணி: வாகன போக்குவரத்து பாதிப்பு குறித்து மாமன்ற உறுப்பினர் கோரிக்கை

கோவை வார்டு 26 மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, அவிநாசி சாலை மேம்பால பணியால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ஏறுதளத்தை மாற்றி அமைக்க கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி வார்டு எண் 26 மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, அவிநாசி சாலை மேம்பால பணியால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அவிநாசி சாலை மேம்பால பணியின் ஒரு பகுதியாக, VK ரோட்டில் இருந்து அவிநாசி சாலைக்கு செல்லும் ஏறுதளம் அமைக்கப்பட உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான வாகனங்கள், பாதசாரிகள், ஆட்டோக்கள், கார்கள், டாக்சிகள் மற்றும் கனரக வாகனங்கள் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று மாமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

தற்போது PSG TECH மேற்கு பகுதி விளாங்குறிச்சி சாலை - அவிநாசி ரோடு சந்திப்பில் 172வது தூண் அருகில், விளாங்குறிச்சி ரோட்டில் இருந்து வாகனங்கள் உள்ளே-வெளியே போக முடியாதபடி சாலை மறைக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன.

இதேபோன்ற சூழல் VK ரோட்டிலும் ஏற்படாமல் இருக்க, ஏறுதளத்தை உயர்த்தி அமைத்து, 100 மீட்டர் மேற்கு புறம் தள்ளி VK ரோட்டில் கனரக வாகனங்கள் செல்லும் அளவிற்கு சாலையை உயர்த்தி அமைக்க வேண்டும் என்று மாமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையை மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நேரடியாகவும், முதலமைச்சர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்கு பதிவுத் தபால் மூலமாகவும் அனுப்பி வைத்துள்ளதாக மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி தெரிவித்துள்ளார்.

Newsletter

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...