கோவை உக்கடம் பெரியகுளம் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி: மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் உக்கடம் பெரியகுளம்-கரும்புக்கடை பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை ஜூலை 11 அன்று நேரில் ஆய்வு செய்தார். உடனடியாக பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (ஜூலை 11) உக்கடம் பெரியகுளத்தில் இருந்து கரும்புக்கடை வழியாக செல்லும் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மண்டலம் வார்டு எண் 86-க்குட்பட்ட பகுதியில் உள்ள இந்த பாசன வாய்க்காலின் நிலையை ஆணையர் நேரில் பார்வையிட்டார். ஆய்வின் போது, வாய்க்காலை தூர்வாரும் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வின் போது மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர் (பொது) இளங்கோவன், மாமன்ற உறுப்பினர் அகமது கபீர், உதவி நகர திட்டமிடுநர் ஜெயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன் மற்றும் பல மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.241 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் வடக்கு மற்றும்...

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...