கோவை ரயில் நிலையத்தில் விரைவில் ரயில் பெட்டி உணவகம்

கோவை ரயில் நிலையத்தில் விரைவில் ரயில் பெட்டி உணவகம் அமைக்கப்பட உள்ளது. லங்கா கார்னர் ரயில்வே பாலத்தின் அருகில் அமைக்கப்படும் இந்த உணவகம், பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும்.


Coimbatore: கோவை ரயில் நிலையத்தில் விரைவில் ரயில் பெட்டி உணவகம் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெற்கு ரயில்வே சார்பில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏற்கனவே இது போன்ற உணவகம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பயன்படுத்தப்படாத ரயில் பெட்டியை உணவகமாக மாற்றி, பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கோவை ரயில் நிலையத்தின் முகப்பில், லங்கா கார்னர் ரயில்வே பாலத்தின் அருகில் இந்த ரயில் பெட்டி உணவகம் அமைக்கப்பட உள்ளது.

இந்த நோக்கத்திற்காக, தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு சேவை செய்த ஒரு ரயில் பெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த ரயில் பெட்டியை உணவகமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரயில் பெட்டி உணவகத்திற்கான டெண்டர் பணி அடுத்த மாதம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய முயற்சி, ரயில் பயணிகளுக்கு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் ஒரு புதிய உணவு அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...