திருப்பூரில் குடியிருப்பு வாசிகள் ஆதார் அட்டைகளை ஒப்படைக்க முயற்சி - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

திருப்பூர் வீரபாண்டி அருகே வஞ்சி நகரில் 30 ஆண்டுகளாக வசிக்கும் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தங்கள் குடியிருப்புக்கு செல்லும் வழியை குடிசை மாற்று வாரியம் தடுப்பதாக கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார் அட்டைகளை ஒப்படைக்க முயன்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள வஞ்சி நகர் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 1050 மனைகள் தனியாரால் விற்பனை செய்யப்பட்டன. இந்த இடத்திற்கு 40 அடி அகலம் கொண்ட சாலை இருப்பதாக பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டதுடன், பஞ்சாயத்து ஒப்புதலும் பெறப்பட்டது. தற்போது இங்கு 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில், அந்த குடியிருப்புக்கு அருகில் குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சாலை அமைந்துள்ள இடம் சொந்தம் என கூறி வேலி அமைக்க முயற்சிப்பதாக குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டினர். இதனால், தாங்கள் அடுக்குமாடி குடியிருப்பு வழியாக சென்று பின்னர் தங்கள் குடியிருப்புக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வாகனங்கள் செல்ல முடியாத குறுகலான பாதை மட்டுமே உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.



இந்த பிரச்சினை தொடர்பாக பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற கோபத்தில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை திரும்ப வழங்க முயன்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...