திருப்பூரில் குடியிருப்பு வாசிகள் ஆதார் அட்டைகளை ஒப்படைக்க முயற்சி - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

திருப்பூர் வீரபாண்டி அருகே வஞ்சி நகரில் 30 ஆண்டுகளாக வசிக்கும் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தங்கள் குடியிருப்புக்கு செல்லும் வழியை குடிசை மாற்று வாரியம் தடுப்பதாக கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார் அட்டைகளை ஒப்படைக்க முயன்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள வஞ்சி நகர் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 1050 மனைகள் தனியாரால் விற்பனை செய்யப்பட்டன. இந்த இடத்திற்கு 40 அடி அகலம் கொண்ட சாலை இருப்பதாக பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டதுடன், பஞ்சாயத்து ஒப்புதலும் பெறப்பட்டது. தற்போது இங்கு 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில், அந்த குடியிருப்புக்கு அருகில் குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சாலை அமைந்துள்ள இடம் சொந்தம் என கூறி வேலி அமைக்க முயற்சிப்பதாக குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டினர். இதனால், தாங்கள் அடுக்குமாடி குடியிருப்பு வழியாக சென்று பின்னர் தங்கள் குடியிருப்புக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வாகனங்கள் செல்ல முடியாத குறுகலான பாதை மட்டுமே உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.



இந்த பிரச்சினை தொடர்பாக பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற கோபத்தில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை திரும்ப வழங்க முயன்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...