பொள்ளாச்சி அருகே ஆழியார் சோதனை சாவடியில் ஃபாஸ்ட் டேக் வசதி அறிமுகம்: சுற்றுலா பயணிகள் வரவேற்பு

பொள்ளாச்சி அருகே ஆழியார் சோதனை சாவடியில் ஃபாஸ்ட் டேக் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகன நெரிசல் குறைந்து, சுற்றுலா பயணிகள் நேரம் மிச்சமாகிறது. சுற்றுலா பயணிகள் இந்த முடிவை வரவேற்றுள்ளனர்.



கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆழியார், கவி அருவி, ஆழியார் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. மேலும், வால்பாறை செல்வதற்கு இந்தப் பாதையே பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. வனத்தின் நடுவே செல்லும் இந்த பாதையில் அவ்வப்போது வனவிலங்குகள் தென்படுவதும் உண்டு.

குளுமையான சூழலை ரசிக்கவும், சுற்றுலாவை மகிழ்ச்சியாக கொண்டாடவும் வெளி ஊர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். குறிப்பாக விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆழியார் சோதனை சாவடியில் ஃபாஸ்ட் டேக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



இதன் மூலம் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஃபாஸ்ட் டேக் வசதி அறிமுகம் செய்யப்பட்டதால், சுற்றுலா பயணிகளின் நேரம் மிச்சமாவதோடு, போக்குவரத்து நெரிசலும் பெருமளவு குறைந்துள்ளது. இந்த புதிய முன்னெடுப்புக்கு சுற்றுலா பயணிகள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது அப்பகுதியில் சுற்றுலாத்துறையை மேலும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...