பொள்ளாச்சி வடுகபாளையம் ரயில்வே கேட் மூடல்: 50க்கும் மேற்பட்டோர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

பொள்ளாச்சி வடுகபாளையம் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படுவதை எதிர்த்து, நகர மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.


Coimbatore: பொள்ளாச்சி நகர மையப்பகுதியில் அமைந்துள்ள வடுகபாளையத்தில் 123 எண் கொண்ட லெவல் கிராசிங் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படுவதை தடுக்க கோரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நகர மன்ற உறுப்பினர் உள்ளிட்ட 50க்கு மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர்.

இந்த ரயில்வே கேட், பொள்ளாச்சி மற்றும் கோவை சாலையை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களாக ரயில்வே துறையினர் இந்த கேட்டை நிரந்தரமாக மூட முயற்சி மேற்கொண்டு வந்தனர். ஆனால் அப்போது பொதுமக்கள் தொடர்ந்து ஆட்சியர் மற்றும் ரயில்வே நிர்வாகத்திடம் இப்பகுதியில் உள்ள மக்கள் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், ரயில்வே கேட் நிரந்தரமாக மூடுவதை கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தனர்.



இந்நிலையில், திடீரென நேற்று இந்த ரயில்வே கிராஸ் நிரந்தரமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்குண்டான பணிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சார்ந்த நகர மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரி தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

செய்தியாளரிடம் பேசிய உமா மகேஸ்வரி, "வடுகபாளையம் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த ரயில்வே கேட் பொள்ளாச்சி மற்றும் கோவை செல்வதற்கு பதினாறு கிராமங்களுக்கு வழித்தடமாக இருக்கிறது. இதனால் அன்றாட பணிக்கும் ரேஷன் கடை, மருத்துவமனை, பள்ளிக்கு செல்வதற்கு 6 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. மாற்றுப்பாதை பயன்படுத்த ஏதுவாகவில்லை," என்று கூறினார்.

மேலும் அவர், "சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறோம். உடனடியாக தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...