கோவையில் இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக பாதிரியார் மீது விஸ்வ ஹிந்து பரிஷத் புகார்

கோவை CSI இம்மானுவேல் சர்ச் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக கூறப்படும் வீடியோ காரணமாக, விஸ்வ ஹிந்து பரிஷத் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.


Coimbatore: கோவையில் இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக கூறப்படும் பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹிப) சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விஹிப அமைப்பினர் ஜூலை 4 ஆம் தேதி ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், கடந்த ஜூன் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கோவை CSI இம்மானுவேல் சர்ச்சில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாதிரியார் பிரின்ஸ் கால்வின் இந்து சமய நம்பிக்கைகளை இழித்தும் பழித்தும் பேசியதாகக் கூறப்படும் காணொளி சமூக வலைதளங்களில் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத துவேஷத்தை பரப்பும் இத்தகைய செயல்கள் தேவையற்ற பதட்டத்தை உருவாக்கும் என்று தெரிந்தே பாதிரியார் இவ்வாறு பேசியுள்ளதாக விஹிப சந்தேகம் தெரிவித்துள்ளது. எனவே, பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தனது புகார் மனுவில் கோரியுள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...