உடுமலை அருகே ரூ.15 கோடி நில மோசடி: கணியூர் பதிவுத்துறைக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

உடுமலை அருகே ரூ.15 கோடி மதிப்புள்ள நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்ததற்கு எதிராக, கணியூர் பதிவுத்துறை அலுவலகத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் கணியூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. சார் பதிவாளர் பழனிச்சாமி லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆளும் கட்சிக்கு சாதகமாக பத்திரப்பதிவு செய்து கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

துங்காவி கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் என்பவரின் மனைவி கலைச்செல்வி மற்றும் அவரது மகன் விஜயராஜா ஆகியோரின் ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்துக்களை, துரைராஜா என்பவரின் மனைவி ராஜாமணி சார்பதிவாளர் அலுவலகத்தில் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடான பதிவுக்கு சார்பதிவாளரும் உடந்தையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில், முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், அப்பாவி விவசாயிகளை ஏமாற்றி பத்திரப்பதிவு செய்து வரும் கணியூர் சார் பதிவாளரை உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அகில இந்திய விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சார் பதிவாளரால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இணைந்து கலந்து கொண்டனர். மேலும் சார் பதிவாளர் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...