திருப்பூர் அருகே சாராயம் காய்ச்சிய மூவர் கைது: 60 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். 60 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 6.4 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வெள்ளகோவில் வாய்க்கால் மேடு பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 60 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 6.4 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (30) என்பவர் தனது வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.



இதையடுத்து, வெள்ளகோவில் போலீசார் மனோஜின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டில் 60 லிட்டர் சாராய ஊரல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், விற்பனைக்காக 6.4 லிட்டர் சாராயம் காய்ச்சி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் மனோஜுடன் சேர்ந்து அவரது நண்பர்களான செல்வராஜ் (53) மற்றும் குட்டி முருகன் (44) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட 60 லிட்டர் சாராய ஊரலை போலீசார் கீழே ஊற்றி அழித்தனர்.

காவல் நிலையத்திற்கு அருகாமையிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, வெள்ளகோவில் போலீசார் அப்பகுதியில் முகாமிட்டு வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...