கோவை மேயர் பதவிக்கு போட்டி: சீனியர் கவுன்சிலர்கள் சிலர் தீவிர முயற்சி

கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய மேயர் பதவிக்கு சீனியர் கவுன்சிலர்கள் சிலர் போட்டியிட முயற்சி செய்கின்றனர். இதற்காக சென்னையில் முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்திக்க காத்திருக்கின்றனர்.


கோவை: கோவை மாநகராட்சியின் மேயர் பதவியை கைப்பற்ற சில சீனியர் கவுன்சிலர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கியுள்ளனர். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டு காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (ஜூலை 3) கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், உடல்நலக் குறைவு காரணமாக மேயர் ராஜினாமா செய்ததாகத் தெரிவித்தனர். கல்பனா தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் வேறு ஒருவர் மூலமாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்பனா ஆனந்தகுமார் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று மேயராக பதவியேற்றார். அவர் 19வது வார்டு கவுன்சிலராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவரது திடீர் ராஜினாமா அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது காலியாகியுள்ள மேயர் பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில், சில சீனியர் கவுன்சிலர்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்னையில் முக்கிய தலைவர்களை சந்திக்க முயற்சி செய்து வருகின்றனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...