கோவையில் பானி பூரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறையின் திடீர் சோதனை: 16 கடைகளுக்கு நோட்டீஸ்

கோவையில் பானி பூரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். 73 கடைகளில் சோதனை செய்யப்பட்டு, 16 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தரமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கோவை மாநகரில் பானி பூரி விற்பனை செய்யும் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் 10 குழுக்களாக பிரிக்கப்பட்டு இந்த சோதனை நடத்தப்பட்டது.

கோவை நகரின் பல்வேறு பகுதிகளான காந்திபுரம், வ.உ.சி. பூங்கா, காந்தி பார்க், ஆர்.எஸ்.புரம், பீளமேடு, சித்ரா, சிங்காநல்லூர், கணபதி, சாய்பாபா காலனி, சரவணம்பட்டி, வடவள்ளி டவுன்ஹால், ராமநாதபுரம், உக்கடம் சுந்தராபுரம், குனியமுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. மேலும், கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், மதுக்கரை, வால்பாறை, மேட்டுப்பாளையம், அன்னூர், பெரியநாயக்கன்பாளையம் போன்ற மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் சோதனை நடைபெற்றது.



இந்த சோதனையின் போது, 73 கடைகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 16 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. நான்கு உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காக 6 கடைகளுக்கு ரூ.12,000 அபராதம் விதிக்கப்பட்டது.



சோதனையின் போது, 65 லிட்டர் அதிக நிறமூட்டப்பட்ட பானி பூரி மசாலா, 57 கிலோ தரமற்ற உருளைக்கிழங்கு, காளான் 5 கிலோ, 19 கிலோ உருளைக்கிழங்கு மசாலா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், செய்தித்தாள்களில் சுற்றப்பட்ட பஜ்ஜி, போண்டா போன்ற உணவுப் பொருட்களும், அதிக நிறமூட்டப்பட்ட சிக்கன் 65, காளான் மசாலா போன்ற 15 கிலோ உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.28,200 ஆகும்.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சோதனை நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...