'அடித்தட்டு மக்களுக்கு கல்வி அவசியம்' - கோவை மறை மாவட்ட ஆயர் டாக்டர் தாமஸ் அக்குவினாஸ்

கோவை மறை மாவட்ட ஆயர் டாக்டர் தாமஸ் அக்குவினாஸ் பிஷப் அம்புரோஸ் கல்லூரி மற்றும் கார்மல் கார்டன் பப்ளிக் பள்ளியின் புதிய அங்கீகாரங்களை கொண்டாடும் விழாவில் பேசினார். அடித்தட்டு மக்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.



கோவை: கோவை சுங்கம் பைபாஸ் அருகே உள்ள பிஷப் அம்புரோஸ் கல்லூரி வளாகத்தில் இன்று மாலை சிறப்பு விழா நடைபெற்றது. இந்த விழா, பிஷப் அம்புரோஸ் கல்லூரிக்கு தன்னாட்சி அந்தஸ்து கிடைத்ததையும், கார்மல் கார்டன் பப்ளிக் பள்ளி சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்றதையும் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.



விழாவின் சிறப்பு விருந்தினராக கோவை மறை மாவட்ட ஆயரும், கல்லூரியின் தலைவருமான டாக்டர் தாமஸ் அக்குவினாஸ் கலந்து கொண்டார். அவர் பள்ளி மற்றும் கல்லூரியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

விழாவிற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் தாமஸ் அக்குவினாஸ், "பிஷப் அம்புரோஸ் கல்லூரி 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது தரம் உயர்த்தப்பட்டு 2024ம் ஆண்டு முதல் தன்னாட்சிக் கல்லூரிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது மாணவர்களின் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவாகும்," என்றார்.

கார்மல் கார்டன் பப்ளிக் பள்ளி பற்றி பேசுகையில், "பெற்றோர்களின் விருப்பத்திற்கேற்ப சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கொண்டு வரும் முயற்சியில் தற்போது சிபிஎஸ்இ அங்கீகாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது," என்று கூறினார்.

கத்தோலிக்க மறை மாவட்டத்தின் நோக்கம் குறித்து பேசுகையில், "எங்களது முக்கிய லட்சியம் தொண்டு செய்வது ஆகும். அதில் கல்வித் தொண்டு முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளோம். குறிப்பாக, கல்வியை வியாபாரமாக இல்லாமல், அடித்தட்டு மக்கள் அனைவருக்கும் கல்வியை கொண்டு சேர்க்கும் வகையில் மாணவர் சேர்க்கைக்கு குறைந்த கட்டணத்தை வழங்கி வருகின்றோம்," என்று விளக்கினார்.

இந்த விழாவில் கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்டேனீஸ் சிறப்புரை வழங்கினார். கல்லூரியின் செயலர் அருட்தந்தை டாக்டர் ஆர்.டி.இ ஜெரோம் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் அ. பீட்டர் ராஜ், பள்ளி முதல்வர் உஷா ராணி, ரோமன் கத்தோலிக்க பள்ளியின் பொறுப்பாளர் ஆரோக்கிய ததேசு மற்றும் கோவை மறை மாவட்ட பொருளாளர் ஆன்டனி செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மேலும், இந்த விழாவில் ஆர் சி குழு உறுப்பினர்கள், பாதிரியார்கள், கன்னியஸ்திரிகள், பள்ளி, கல்லூரி துணை முதல்வர், டீன் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த விழா, கோவையின் கல்வித்துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அடித்தட்டு மக்களுக்கு தரமான கல்வியை குறைந்த செலவில் வழங்கும் முயற்சி பெரிதும் பாராட்டப்படுகிறது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...