போதைப்பொருள் எதிர்ப்பு தினம் - திவான்சபுதூரில் வாணவராயர் வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

திவான்சபுதூரில், வாணவராயர் வேளாண் கல்லூரியில் பயிலும் இரண்டாம் ஆண்டு படிக்கும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தமிழ்நாடு காவல்துறை, ஆனைமலை பிரிவுடன் இணைந்து போதைப்பொருள் பற்றி விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.


கோவை: ஒவ்வொரு வருடமும் ஜூன் 26 அன்று, “போதைப்பொருள் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத வர்த்தக எதிர்ப்பு தினம்”, இளைஞர்களுக்கு போதைப்பொருள் பயன்பாட்டின் ஆபத்துகள் மற்றும் சமூகம், கலாச்சாரம், கல்வி மற்றும் குடும்ப நலத்தில் அதன் தாக்கத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது.



இந்த நாளை நினைவுகூர்ந்து, பொள்ளாச்சி வாணவராயர் வேளாண் கல்லூரியில் பயிலும் இரண்டாம் ஆண்டு நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் ஜூன் 26, 2024 அன்று, திவான்சபுதூரில் தமிழ் நாடு காவல்துறை, ஆனைமலை பிரிவுடன் இணைந்து "விழிப்புணர்வு பேரணி" ஒன்றை ஏற்பாடு செய்தனர்.



இந்த பேரணியை சிறப்பு துணை ஆய்வாளர் சமுத்திரபாண்டியன் தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.



இந்த நிகழ்வு, போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகளை விளக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், முனைவர் G. தாமோதரன், முனைவர் N. நவீனா, முனைவர் H. சங்கரராமன் மற்றும் துணை ஆய்வாளர் கென்னடி, காவல் ஆய்வாளர் முருகவேல் ஆகியோர் இந்த பேரணியை ஒருங்கிணைத்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...