சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு - கோவையில் விவசாயிகள் சங்க தலைவர் வரவேற்பு

சாதி வேறுபாடின்றி, பொருளாதாரம், கல்வி, மருத்துவம், முன்னேற்றம், ஒருமைப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், நீண்ட காலமாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த கோரிக்கை ஒரு தீர்வு காண்கின்ற வகையில் தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிப்பை வரவேற்பதாக கூறினார்.

இதை வைத்துக்கொண்டு அரசியல் ரீதியாக அல்லது மக்களிடத்தில் பிரிவினையை, ஏற்படுத்தக்கூடிய சில நபர்களும் இருப்பதாக கூறிய அவர், சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்துள்ளதால், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த சாதி வாரி கணக்கெடுப்பு, ஏற்ற தாழ்வு இல்லாமல், சாதி வேறுபாடின்றி, பொருளாதாரம், கல்வி, மருத்துவம், முன்னேற்றம், ஒருமைப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த கணக்கெடுப்பிற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறிய அவர், இந்த முயற்சிக்கு தமிழ்நாடு விவசாய சங்கம் முழுமையான வரவேற்பை வழங்குவதாக தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...